Wednesday 10 May 2017

பெற்றோர் கவனத்திற்கு!!!!

பெற்றோர்கள் கவனத்திற்கு.. பிளஸ் 2 தேர்வு முடிவு இன்னும் இரண்டே நாளில்...!
இன்னும் இரண்டு நாட்களில் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரவிருக்கிறது. பெற்றோர்கள் உங்கள் குழந்தைகளிடம் சரியான அனுகுமுறையைக் கையாளுங்கள்.

12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளிவர இருக்கும் இந்த நேரத்தில் பெற்றோர்கள் தங்கள் குழந்கைளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும். அவர்களின் வெற்றித் தோல்விகளில் அவர்களுடன் இருந்து அவர்களுக்கு முழு பக்கபலமாக இருக்க வேண்டியக் கடமை பெற்றோர்களுக்குத்தான் அதிகமாக உள்ளது.
12ம் வகுப்பு பொதுத் தேர்வு மே 12ம் தேதி வெளியாகும். 10ம் வகுப்பு பொதுத் தேர்வு மே 19ம் தேதி வெளியாகிறது என ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முடிந்த சில நாட்களிலேயே பல மாணவர்கள் தேர்வு முடிவைக் குறித்த பயத்தில் வீட்டை விட்டு வெளியேறுதல், தவறான முடிவுகளை எடுத்தல் போன்ற காரியங்களில் ஈடுபடுகின்றனர்.


பெற்றோர்கள் கவனத்திற்கு
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் மனநிலையை நன்றாகப் புரிந்தவர்கள். அதனால் பெற்றோர்கள் குழந்தைகளிடம் அவர்கள் எடுக்கும் மதிப்பெண்களைக் குறித்து அதிகமாக விமர்சித்துவிடக் கூடாது. மதிப்பெண் அதிகமாகப் பெற்றால் பாராட்டுங்கள். சற்று குறைந்துவிட்டால் அதற்காக அவர்களைக் காயப்படுத்தாதீர்கள். அவர்களுக்கு ஆறுதலாக இருங்கள்.

 
பக்கபலமாக இருங்கள்
உன்னால் சாதிக்கமுடியும். வெறும் மதிப்பெண்களும் உயர்க்கல்வியும் மட்டும் வாழ்க்கையல்ல என்பதை உங்கள் குழந்தைகளுக்கு உணர்த்துங்கள். அவர்கள் விருப்பத்தைக் கேட்டு அதற்கேற்ற உயர்கல்வி படிப்புகளில் அவர்களை சேர்த்துவிடுங்கள். இன்னும் இரண்டு நாட்கள்தான் தேர்வு முடிவு வர விருப்பதால் தங்கள் எதிர்காலமே இந்த தேர்வு முடிவுதான் எப்படி வருமோ என பயந்து கொண்டிருக்கும் உங்கள் பிள்ளைகளுக்கு தைரியம் கொடுங்கள். அவர்களைத் தனியாக விடாதீர்கள். அவர்கள் மேல் எப்போதும் ஒரு கண் வைத்துக் கொண்டே இருங்கள்...

Wednesday 5 April 2017

ஃபாத்திமா பீர் முஹம்மது பதிவிலிருந்து!!!!

💎ﺑِﺴْﻢِ ﺍﻟﻠَّﻪِ ﺍﻟﺮَّﺣْﻤَﻦِ ﺍﻟﺮَّﺣِﻴﻢ💎

#Biological_Clock_System!

#சுபுஹானல்லாஹ்...!!!

நமது உடல் ஓர் அற்புத படைப்பு.  அதில் ஆச்சரியப்படத்தக்க பல அம்சங்கள் உள்ளன!!

அதில் ஒன்றுதான் நமது உடலில் நேரத்தை தானாகவே ஒழுங்கு படுத்தும் உயிரியல் நேர முறைமை (Biological Clock System)!!!

இதனை வழி நடத்தும் ஒரு சுரப்பி நம் ஒவ்வொருவரின் தலையிலும் உள்ளது.  அதுதான் பினியல் சுரப்பி!!

கடலை உருண்டை வடிவில் இருக்கும் இந்த PINEAL GLAND; பார்வை நரம்புடன் இணைக்கப்பட்டுள்ளது!!

இந்த பினியல் சுரப்பி; ஓர் அரிய  பொருளை தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சுரக்கிறது!!

அதுதான் மெலடோனின் (melatonin)!!

இந்த அதிசய அரிய பொருளின் பலன் மகத்தானது!  புற்று நோயைக் குணப்படுத்தும் இயற்கை மருந்து இந்தப் பொருளில் இருக்கிறது என்று இன்று மருத்துவ விஞ்ஞானிகள் கண்டுப்பிடித்துள்ளார்கள்!!    

மெலடோனின் சுரக்க வேண்டும் என்றால்; ஒரே ஒரு நிபந்தனை. இரவின் இருளாக இருக்க வேண்டும்!!

ஆம்!  இரவின் இருளில்தான் பினியல் சுரப்பி மெலடோனினை சுரக்கும்!!

அதனுடன் இணைக்கப்பட்டுள்ள பார்வை நரம்பு மூலமாக; அது இரவின் இருளை அறிந்து கொள்ளும்!!

ஒவ்வொரு நாளும் இஷாவுக்குப் பிறகு; இருளில் சுரக்கும் மெலடோனின், நமது இரத்த நாளங்களில் பாய்ந்தோடும்.!!

நமது கண்கள் வெளிச்சத்தில் பட்டுக் கொண்டிருந்தால் பினியல் சுரப்பி மெலடோனினை சுரக்காது!!

பினியல் சுரப்பி  மெலடோனினை இஷாவுக்குப் பிறகு சுரக்க ஆர்மபித்து ஃபஜருக்கு இரண்டு மணி நேரத்துக்கு முன் நிறுத்தி விடும்!!

ஆகவே இரவு  நீண்ட நேரம் கண் விழித்திருந்தால்; நாம் புற்று நோயைக் குணப்படுத்தும் மெலடோனின் என்ற இயற்கை மருந்தை இழந்தவர்களாக ஆவோம்.!!!!

எனவே; இரவு முற்கூட்டியே உறங்கி அதிகாலையில் எழுவது புற்று  நோயைத் தடுக்கும் என்று இன்று மருத்துவ உலகம் கூறுகிறது!!

அதே போன்று; அதிகாலையில் காற்று வெளி மண்டலத்தில் ஓஸோன் நிறைந்திருக்கும்.  ஒரு மனிதன் அதிகாலையில் எழுந்து நடமாட ஆரம்பித்தால்:; இந்த ஓஸோன் காற்றை அவன் சுவாசிப்பான்.!!

இது நமது உடலிலுள்ள நோய்களைக் குணப்படுத்தி, நம் ஆயுளை அதிகரிக்கும் என்று மருத்துவ விஞ்ஞானிகள் கூறுகின்றனர்!!

ஆக;  இரவு முற்கூட்டியே உறங்குவதால்; மெலடோனின் கிடைக்கிறது! அதிகாலையில் எழுந்து அலுவல்களைத் துவங்குவதால்; ஓஸோன் கிடைக்கிறது!!

நமது உடலின் ஆரோக்கியம் அனைத்தும் இவற்றில் அடங்கியிருக்கிறது!!!

இதனைத்தான் 1400 ஆண்டுகளுக்கு முன்பே; அண்ணல் நபிகளார் அவர்கள் அழகுற எடுத்துக் கூறினார்கள்!!

அற்புதமாக வாழ்ந்தும் காட்டினார்கள்! அவர்களது வாழ்க்கை முறை; இஷாவுக்குப் பின் உடனே உறங்கி முன் அதிகாலையில் தஹஜ்ஜத்துக்கு எழும் வழக்கம் உடையதாக  இருந்தது!!

அதிகாலையின் சில மணி நேரங்கள் அந்த நாளின் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கக் கூடியவையாக இருக்கின்றன!!

அதிகாலையில் எழும்போது; நமது மூளையும்,  இன்னபிற உறுப்புகளும் பூரண ஓய்வு பெற்று வேலை செய்ய தயாராக இருக்கும்!!

அந்த நேரத்தில் செய்யும் பணிகள் அனைத்தும் திறமை மிக்கதாகவும்,  ஆற்றல் அழுத்தம் மிக்கதாகவும் திகழும்!!

எனவே முன் எழுந்து முன் மறையும் அதிசய மெலடோனினைப் பெறவும்,  அதிகாலைப் பொழுதின் ஓஸோனைப் பெறவும்,  அனைத்துக்கும் மேலாக அல்லாஹ்வின் அருளைப் பெறவும்..!; ஒரு முஸ்லீம் முன் தூங்கி முன் எழ வேண்டும்!!!

(அறிந்ததை அறியாதோர் கற்கும் நோக்கில் பதிந்த பதிவாளருக்கு அல்லாஹ் அருள் புரிவானாக!!)

#படியுங்கள்,
#சிந்தியுங்கள்....
#செயல்படுங்கள்,
#பகிருங்கள்...
💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢

Friday 17 March 2017

இஸ்லாத்தை நோக்கி அலை அலையாய்!!!

இஸ்லாத்தை தழுவினார்!!!
பத்மநாபன் 'உமர் கத்தாப்' ஆக!!
நாள்: 17/03/17
TNTJ கோவை வடக்கு மாவட்டம்
காந்திபுரம் கிளை https://t.co/mIfuNFe6aQ

Friday 24 February 2017

Shifana Farzana முகநூல் பதிவிலிருந்து!!!!

தென்காசி யில்.. மாநாட்டிற்கு பிறகும்..
#ஆர்வத்துடன்_களம்_இறங்கிய_மகளிரணியினர்

கடைக்கோடியில் இருக்கும் ஒருவர் இந்த தவ்ஹீத்க்கு வராத வரை எங்கள் பயணம் ஓயாது. இன்ஷாஅல்லாஹ்.

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்..

TNTJ நெல்லை மேற்கு மாவட்டம்
தென்காசி கிழக்கு கிளை சார்பாக மகளிரணியினர் குழு தாவா இன்று 23-2-2017(வியாழக்கிழமை) மஸ்ஜிதுஸ் ஸலாம் பள்ளிவாசல் தெரு,மற்றும் skp தெரு இரு தெருக்களில் இணைவைப்பு குறித்து விளக்கி, வருகிற பிப்ரவரி 25 சனிக்கிழமை இணைவைப்பிற்கு எதிராக கொடிமரத்தில் நடைபெறும் மார்க்க விளக்க கூட்டத்திற்கும் அழைப்பு விடப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்..

என்றும் மார்க்கம் மற்றும் சமுதாய பணிகளில்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
தென்காசி கிழக்கு கிளை
நெல்லை மேற்கு மாவட்டம்

Sunday 19 February 2017

சீராப்புராணம் கட்டுக்கதை!!!!

●அஸ்ஸலாமு அலைக்கும்.
■ நமது திருமணங்களில்
இவ்வளவு அனாச்சாரங்கள்
 கலக்க காரணம் சீறாபுராணம் எழுதிய உமறு புலவரும் ஒரு காரணம்.
அவர் அலி (ரலி) பாத்திமா திருமணத்தை
ரொம்ப கற்பனை கலந்து எழுதியிருக்கிறார்.
அதை நம்ம மக்களும் மார்க்கம் என செய்ய தொடங்கினர்.
பொய்யிலே பிறந்து பொய்யிலே
வளர்ந்த அந்த புலவர் எழுதிய அந்த திருமணத்தில் அலி ரலி குதிரையில் மாப்பிள்ளையாக வந்தார்கள்.அதன் பாதிப்பு இன்றும் தொடர்ந்ததை பார்த்தோம்.
அந்த பாலைவன பிரதேசத்தில் மாவிலை வாழையிலை தோரணமாம்.
கவிதைக்கு பொய் அழகு என
நிருபித்து இருப்பார்.
ஜிப்ரில் அலை அவர்கள் கருகமணி கொண்டு வந்து கட்ட சொன்னார்கள் என பொய் சொல்லி இருப்பார்.நிறைய வழிகேடுகளுக்கு காரணமாய் இருந்தார்.
பலவித இசைக்கருவிகள் முழங்க
திருமணம் நடந்ததாக எழுதி இருப்பார்.
எல்லாம் மார்க்கத்திற்கு முரணாக.
சகாபாக்கள் எளிமையாக திருமணம் நடத்தியிருக்க அதற்கு மாற்றமாக இந்த புலவரும் புழுகியிருக்க நமது மக்களும் பின்பற்ற தொடங்கினர்.
உலக தலைவர்கள் எல்லோரும் வந்ததாக புழுகி இருப்பார்.
● எளிமையான திருமணத்தில்தான் அல்லாஹ்வின் பரக்கத் (மறைமுக பேரருள்) இருக்கின்றது என நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறியுள்ளார்கள்.
மாஷா அல்லாஹ்.

Saturday 18 February 2017

பர்வீன் பின்த் மீரான் அக்கா பதிவிலிருந்து!!!

படித்ததில் பிடித்தது!!

ஸாலிஹான பெண்ணே
சத்தம் பாேடாமல் இதை காெஞ்சம் படி!!
..............

..
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

 ஸ்லிம்மாய் நீயிருக்க
சின்னதாய் ஹபாயா தச்சாயாே....
பாேட்டுட்டு தச்சாயாே...
தச்சிட்டு பாேட்டாயாே..
தண்டனை இதற்கு
என்ன கிடைக்கும் தெரியுமா? பெண்ணே
காெஞ்சம் பாெறு
மஹ்ஸர் வரை காத்திரு!!

லிப்ஸ்டிக் பாேட்டு
உன் உதட்டுக்கு
சாயம் பூசுகிறாய்!
உன் உள்ளம் அங்கே
கறுப்பாகவே இருக்க காரணம் என்ன
சாெல்லடி பெண்ணே!!

கறுப்பு ஹபாயா
பேஷனில்லை !!
கலர் கலராய்
இன்று ஹபாயாக்கள் !!

கப்றுக்குழிக்குள் நீ
கபன்துணியுடன் மட்டுமே
செல்வாய் மறந்தாயாே
பெண்ணே....

மார்க்கம் தெரிந்த நீ
மார்பழகு காட்டி

மருதாேண்டியிட்டு
ரெப்பிங் ஸ்காப் கட்டி
ஆடவரை
மதி மயங்க செய்வது
மடத்தனமில்லையா?

உன்  உள் மனம் உறுத்தவில்லைய பெண்ணே....??

உன் அழகு
#கணவனுக்கு_மட்டுமே
கண்டவனுக்கில்லை
கண்ணியமாய் நடந்துகாெள்
பெண்ணே!!


Friday 17 February 2017

இஸ்லாத்தில் முதல் ஜூம்மா!!!

இஸ்லாத்தில் முதலாவது ஆரம்பிக்கப்பட்ட ஜும்ஆ.
https://absaaysha.blogspot.com/2016/11/blog-post_13.html?m=1
இஸ்லாத்தில் முதன் முதலாவது ஜம்ஆவை ஆரம்பித்த பெருமை அஸ்அத் பின் ஸுராரா (ரலி) அவர்களுக்கே இந்தப் பெருமை சேரும். மக்காவில் நபி (ஸல்) அவர்களால் நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலுடன் இந்த நபித் தோழர் முதன் முதலில் மதீனாவிற்கு ஒரு மைல் தூரத்தில் உள்ள பனூ பயாழா என்ற ஒரு கூட்டத்தினருக்குச் சொந்தமாக கூழாங் கற்கள் நிறைந்த இடத்தில் அஸ்அத் பின் ஸுராரா (ரலி) அவர்களின் தலைமையில் கிட்டத்தட்ட நாட்பது பேர்களை உள்ளடக்கிய ஒரு சிறு கூட்டத்தினர் இவரின் தலைமையில் தொழுதார்கள் என்ற வரலாற்றை இப்போது நாம் பார்ப்போம்.
நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய நாற்பதாவது வயதில் அல்லாஹ்வின் தூதர் என்று மக்காவில் பிரச்சாரம் செய்தார்கள் பிரச்சாரம் செய்யும் போது கடுமையான சோதனைகளுக்கும் தொல்லைகளுக்கும் துன்பங்களுக்கும் மத்தியில் இந்த சத்தியப் பிரச்சாரத்தை மக்கள் மத்தியில் செய்து வந்தார்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட அந்த மக்கள் தொழுகை நிறைவேற்றும் போது கூட அவர்கள் அனைவர்களும் கூட்டாகத் தொழ முடியாத ஒரு நிர்ப்பந்தமான நிலை இருந்தது.
மக்காவில் நபியாக வாழ்ந்த பதின் மூன்று வருட காலத்தில் அவர்கள் ஜும்ஆவை நடத்த முடியவில்லை. மக்கா வெற்றிக்குப் பிறகுதான் அங்கு ஜும்ஆ நடைபெற்று வந்தது. மக்காவைப் பொறுத்த வரை அறபுக்கள் அனைவர்களும் கஃபாவை புனிதமான ஒரு ஆலயமாகக் கருதி வந்தார்கள். ஹஜ்ஜுடைய காலத்தில் அனைவர்களும் மக்காவிற்கு யாத்திரிகை மேற் கொண்டு மக்காவை நோக்கி வருவார்கள். அப்படி மக்காவிற்கு ஹஜ்ஜுக்கு வரும் மக்களிடம் நபி (ஸல்) அவர்கள் தான் இறைத் தூதர் என்பதையும் இஸ்லாத்தினுடைய சட்டதிட்டங்களையும் ஓர் இறைக் கோட்பாட்டையும் சிலை வணக்கத்தையும் எதிர்த்து உள்ளுர் மக்களுக்கு சொல்வது போன்று வெளியூரில் இருந்து வரும் மக்களுக்கும் பிரச்சாரம் செய்வார்கள். இப்படி பதின் மூன்று வருட காலம் செய்து வந்தார்கள் இப்படி நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய ஐம்பதாவது வயதில் மதீனாவில் இருந்து ஆறு பேர்கள் கொண்ட ஒரு குழு ஹஜ் செய்வதற்காக வேண்டி வருகை தந்தார்கள். அந்த ஆறு பேர்களுக்கும் நபி (ஸல்) அவர்கள் இஸ்லாத்தைப் போதித்தார்கள். இவ்வாறு நபி (ஸல்) அவர்களின் போதனையைக் ஆறு பேர்களும் கேட்ட போது அவர்களுக்கு ஒரு மன மாற்றம் ஏற்பட்டு இவர் கூறுவது சரியாகத் தோன்றுவதாக அவர்களுக்குள் ஒரு சிறு மாற்றம் ஏற்பட்டது.
ஆனால் அந்த நேரம்; இஸ்லாத்தை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை நபி (ஸல்) அவர்களை சந்தித்து விட்டு மதீனாவிற்குச் சென்ற இவர்கள் அடுத்த ஆண்டு வரும் போது இந்த ஆறு பேர்களுடன் சேர்ந்து பனிரெண்டு பேர்கள் மதீனாவில் இருந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதற்காக வேண்டி நபி (ஸல்) அவர்களைப் பார்ப்பதற்கு மக்காவிற்கு வருகிறார்கள்.
அடுத்த ஆண்டு ஹஜ்ஜுடைய காலத்தைக் கணித்து வருகிறார்கள் ஏனெனில் ஹஜ்ஜுடைய காலம் அல்லாத காலத்தில் முஹம்மதை சந்திக்க வந்தவர்கள் என்று மக்கா இணைவைப்பாளர்களுக்கு தெரிந்தால் அவர்களுக்கு சொல்லொன்னாத் துன்பதைக் கொடுப்பார்கள் அதனால் தான் அவர்கள் ஹஜ் காலத்தை தேர்வு செய்தார்கள். இந்த பனிரெண்டு பேர்களும் நபி (ஸல்) அவர்களை தனித் தனியாக சந்தித்தார்கள். அவர்கள் அல்லாஹ்வை இறைவனாகவும் நபி (ஸல்) அவர்களை அல்லாஹ்வின் இறுதித் தூதராகவும் ஏற்றுக் கொண்டதோடு இஸ்லாத்தை வாழ்க்கை நெரியாகவும் ஏற்றுக் கொண்டு உயிருள்ள வரை இஸ்லாத்தை உயிருள்ள வரை பின்பற்றுவதாகவும் இன்னும் பல உடன் படிக்கைகளையும் எடுத்துக் கொண்டு நாங்கள் எங்கள் ஊராகிய மதீனாவிற்குச் சென்று அங்கு இந்த சத்தியப் பிரச்சாரத்தை செய்வதாகவும் நபி (ஸல்) அவர்களுக்கு உறுதி மொழி கொடுத்தார்கள். இவர்கள் ஹஸ்ரஜ் கோத்திரத்தைச் சேர்ந்த அஸ்அத் பின் சுராரா (ரலி) அவர்களின் தலைமையில் முதன் முதலில் இஸ்லாத்தைத் தழுவுகிறார்கள். இவர்கள் தான் இஸ்லாமிய சாம்ராஜியம் மதீனாவில் உருவாகுவதற்கு அடித்தளமிட்டவர்கள். நபி (ஸல்) அவர்கள் அவர்களில் தலைமையில் இஸ்லாமிய அரசு உருவாகுவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர்களில் கஅப் பின் மாலிக், உபாதா பின் அஸ்ஸாமித், உக்பா பின் ஆமிர், பத்ருப் போரில் அபூ ஜஹ்லைக் கொன்ற முஆத் (ரலி) ஆகியோர் அடங்குவார்கள்.
இந்த பன்னிரெண்டு பேர் நபி (ஸல்) அவர்களை சந்தித்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர். அவர்கள் இஸ்லாத்தை எற்றபின் நீங்கள் உங்கள் ஊருக்குச்சென்று ஜும்ஆ தொழுகை நடத்துங்கள் ஏனென்றால் மக்காவில் ஜும்ஆ நடத்த இயலாது. அதனால் நீங்கள் மதீனாவிற்கு சென்று அங்கு ஜும்ஆ தொழுகை நடத்துங்கள் என்று அந்த பன்னிரெண்டு பேரில் அஸ்அத் பின் சுராரா அவர்களுக்கு ஆணை பிறப்பித்தார்கள். அவர் அங்கு சென்று ஜும்ஆவை நடத்தினார்.
இது நபி (ஸல்) அவர்களின் 52 வது வயதில் நடந்தது. நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என நியமனம் செய்து 12 வது வருடத்திற்கு பிறகு முதல் ஜு

Thursday 16 February 2017

சமுக வளைதளங்களில் எச்சரிக்கை!!!!

மிகவும் வேதனையோடு
இடும் பதிவு இது.
அது ஒரு அழகான குடும்பம்.
தினமும் தஹஜ்ஜத் தொழுகைக்காக
கணவரை எழுப்பி விட்டு தானும் தொழுகையில் ஈடுபடுவார் மனைவி.
தொழிலில் பிரிந்திருந்த கணவர்
வழமைப் போன்று கைபேசியில் தனது
மனைவியோடு உரையாட முற்பட்ட போது
அது நிறுத்தி வைக்கப் பட்டிருந்தது.
கவலையடைந்த கணவர் தொழைபேசியில்
தொடர்ப்புக் கொண்டு காரணம் கேட்டார்.
பதில் சொன்னார் மனைவி.
'ஒரு ரோங்கோல் வந்து அடிக்கடி தொல்லைப்
படுத்துவதால் இனிமேல் அதை பாவிப்பதில்லையென '.
எனது இலக்கங்கள் தெரியும் தானே.
அதை கண்டால் மாத்திரம் எடுங்கள்.
மற்றதை பெரிதுப்படுத்த தேவையில்லை.
அதற்காக போணை ஓஃப் பண்ண வேண்டாம்
நான் அடிக்கடி பேச வேண்டும் 'என்றார்
கணவர்.
சிலக்காலம் கடந்தது.
ஒரு நாள் அவரது தாயார் அவசரமாக ஊருக்கு வருப்படி மகனை அழைத்தார்.
வந்ததும் தாயும் அவரது இரண்டு
பிள்ளைகளும் அவரை கட்டிக் கொண்டு
கதறி அழுதனர்.
மனைவி காணாமல் போயிருந்தாள்.
மிகவும் வேதனையில் வீழ்ந்தார் அவர்.
உயிருக்குயிராய் வாழ்ந்தவர்கள்.
தீடீரென என்ன நடந்ததென தவித்தார்.
வணக்க வழிப்பாடுகளில் மிக ஈடுபாடு
கொண்டவராக இருந்தவர்.
ரகசிய பொலிஸ் மூலம் தேடலில் சில
மாதங்கள் நகர்ந்தன.
பிள்ளைகளது அழுகையை கட்டுப் படுத்த
முடியவில்லை. பல ஊடக அறிவிப்பின்
மூலம் தேடலில் பல மாதங்கள் கடந்தன.
ஒரு நாள். . .
ஒரு இளம் பெண்ணின் சடலம் கிடைத்துள்ளதாக ஒரு தகவல் கிடைத்து
உடனே விரைந்தார்.
ஆம். . .
அது அவரது மனைவிதான்.
அதிர்ந்து போனார்.
அவளது கையில் நீண்டதோர் மடல்.
அதை எடுத்து பிரித்துப் பார்த்தார்.
அதில். . .
நான் அந்த போனை ஓஃப் பண்ணியே
வைத்திருக்க வேண்டும்.
அந்த ரோங் நம்பர் தொடர்ச்சியாக தொல்லை
கொடுத்ததால் அவனை திட்டி அதை
கட்டுப் படுத்துவதற்காகவே ஒரு நாள்
ஹான்ஸர் பண்ணினேன்.
ஆனால் அவன் என்னோடு பேசிய விதம்
என் மனதை மாற்றிவிட்டது.
சும்மா பேசுவதில் என்னதான் ஆகப் போகிறது என்ற நினைப்பில் அவன்
பேசும் போதெல்லாம் பேச ஆரம்பித்தேன்.
அவனது கணிவான, கவற்சியான பேச்சுக்கள் மிகவும் பிடித்தது.
அதனால் வேறு எதிலும் ஈடுபட தோன்றுவதில்லை.
என்னை அறியாமலயே எல்லோரையும்,
எல்லாவற்றையும் வெறுக்க ஆரம்பித்தேன்.
அவன் அழைத்ததும் எதையும் யோசிக்க
தோன்றாமல் போய் விட்டேன்.
எனது கையில் இருந்த பணம் முடியும்வரை
நல்லவனாக இருந்தான்.ஆனால்
பணம் முடிந்த பிறகு அவனது சுயரூபத்தை
காட்ட ஆரம்பித்து விட்டான்.
என்னை வைத்து பணம் சம்பாதிப்பதுவே
அவனது திட்டம்.
நான் மிகவும் ஏமாந்து விட்டேன்.
எவ்வளவு அழகான வாழ்கை வாழ்ந்து
கொண்டிருந்தேன். திடீரென்று எனக்கு
என்ன நடந்ததென்று புரியவில்லை.
எனக்கு மீண்டும் உங்களிடம் வர முடியாது.
யார் முகத்தையும் பார்க்கவும் முடியாது.
அதற்காக இப்படியானதொரு
கேவளமான வாழ்கை வாழவும் முடியாது.
தினந்தினம் சாவதை விட இதுவே
முடிவாக ஏற்றுக் கொண்டேன்.
என்னை மன்னித்து விடுங்கள்.
இப்படியாக நீண்டுச் சென்றது அம்மடல்.
இதுபோன்ற சம்பவங்களை தற்காலத்தில்
அடிக்கடி செவியுற முடிகிறது.
மிகவும் வேதனையைத் தருகிறது.
காலத்தால் மாற்ற முடியாத காயத்தை
ஏற்படுத்துகின்ற இதுபோன்ற நிகழ்வுகள்
ஏற்படுவதை தவிர்க்கவும், தடுக்கவும்
பல வழிகள் உண்டு.
முதலில் கணவன், மனைவி பிரிவுகளை
தவிற்க வேண்டும். ஒரு குடும்பத் தலைவன்
பாதுகாப்பதுபோன்று ஒரு குடும்பத்தை
வேறு யாராலும் கண்காணிக்க முடியாது.
அவ்வாறு எதிர்ப்பார்ப்பதும் தவறு.
தொழில்களை குடும்பத்தோடு ஒன்றாய்
இருந்து வாழும் இடத்தில் அமைத்துக்
கொள்ள வேண்டும்.
சைத்தானின் வலையில் வீழ்வது எழிது.
அது எந்த ரூபத்தில் வந்து சேரும் என்பது
யாராலும் உணர முடியாத ஒன்று.
பெண்கள் இச்சமூகத்தின் கண்களாகும்.
இமைகள் இல்லையானால் எந்தக் கண்களையுமே பாதுகாக்க முடியாது.
ஆண்களே. . . .
நீங்கள் இச்சமூகத்தின் தூண்களாக
மட்டுமின்றி கண்களை பாதுகாக்கும்
இமைகளாகவும் மாறி பெண்களை, பேண்
பிள்ளைகளை, குடும்பத்தை பாதுகாருங்கள்.
அது உங்கள் கடமை.
யா அல்லாஹ்.  . .
இதுபோன்ற அவலங்களில் இருந்து
சகல குடும்பங்களையும் காப்பாற்றியருள்.
Writer jareena musthafa

Wednesday 15 February 2017

சூரா பகராவின் இறுதி வசனம்!!

آمَنَ الرَّسُولُ بِمَا أُنزِلَ إِلَيْهِ مِن رَّبِّهِ وَالْمُؤْمِنُونَ ۚ كُلٌّ آمَنَ بِاللَّهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ لَا نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِّن رُّسُلِهِ ۚ وَقَالُوا سَمِعْنَا وَأَطَعْنَا ۖ غُفْرَانَكَ رَبَّنَا وَإِلَيْكَ الْمَصِيرُ

ஆமனர் ரசூலு பிமா உன்ஸில இலைஹி மிர்ரப்பிஹி வல், முஃமினுன் குல்லுன் அமன பில்லாஹி  வ,மலாயிகதிஹி வ,குத்துபிஹி வ,ருசுலிஹி லா,னு Fபர்ரிகு பைன அஹதிம் மிர்,ருசுலிஹ் வ,காலு சமிஃனா வ,அதஃனா

 குFப்ரானக ரப்பனா வ, இலைகல் மஸீர்

لَا يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلَّا وُسْعَهَا ۚ لَهَا مَا كَسَبَتْ وَعَلَيْهَا مَا اكْتَسَبَتْ ۗ رَبَّنَا لَا تُؤَاخِذْنَا إِن نَّسِينَا أَوْ أَخْطَأْنَا ۚ رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِن قَبْلِنَا ۚ رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِ ۖ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا ۚ أَنتَ مَوْلَانَا فَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ

லா, யு'கல்லிFபுல்லாஹு நFப்ஸன் இல்லா உஸ் அஹா லஹா மா கஸபத் வ'அலைஹா மக்„தஸபத்
ரப்பனா லா,துஆகித்னா இன்,நஸீனா அவ்,அக்தஃனா

ரப்பனா வலா, தஹ்மில் அலைனா இஸ்ரன் கமா ஹமல்தஹு அலல்லதீன மின் கப்லினா.

ரப்பனா வலா,துஹம்மில்னா மா„லா,தாகத லனா பிஹி

வஃfபு அன்னா வஃFபிர்லனா வர்ஹம்னா அன்த மவ்லானா Fபன்ஸுர்னா அலல் கவ்மில் காFபிரீன்
ஸுரா நபா முழு சூரா தமிழில் மனனம் செய்து கொள்ளுங்கள்.

https://absaaysha.blogspot.com/2017/02/blog-post.html?m=1

عَمَّ يَتَسَاءَلُونَ

அம்ம எத்தஸா அலூன்

عَنِ النَّبَإِ الْعَظِيمِ

அனின் நபயில் அழீம்

الَّذِي هُمْ فِيهِ مُخْتَلِفُونَ

அல்லதீஹும் Fபிஹி முக்தலிFபூன்

كَلَّا سَيَعْلَمُونَ

கல்லாஸ யஃலமூன

ثُمَّ كَلَّا سَيَعْلَمُونَ
ஸும்ம கல்லாஸ யஃலமூன்

أَلَمْ نَجْعَلِ الْأَرْضَ مِهَادًا

அலம் நஜ்அலில் அர்ழ. மிஹாதா..

وَالْجِبَالَ أَوْتَادًا

வல் ஜிபா,ல அவ்தாதா..

وَخَلَقْنَاكُمْ أَزْوَاجًا

வ கலக்னாக்கும் அஸ்வாஜா..

وَجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًا

வஜ் அல்னா நவ்மKகும் ஸுபாதா..

وَجَعَلْنَا اللَّيْلَ لِبَاسًا

வஜ் அல்னல் லை,ல லிபாஸா..

وَجَعَلْنَا النَّهَارَ مَعَاشًا

வஜ் அல்னன் நஹார மஆஷா..

وَبَنَيْنَا فَوْقَكُمْ سَبْعًا شِدَادًا

வ பைனா Fபவ்கKகும் சப்அன் ஷிதாதா..

وَجَعَلْنَا سِرَاجًا وَهَّاجًا

வஜ் அல்னா ஸிராஜவ் வஹ்ஹாஜா

وَأَنزَلْنَا مِنَ الْمُعْصِرَاتِ مَاءً ثَجَّاجًا

வ அன்ஸல்னா மினல் முஃஸிராதி மாஅன் சஜ்ஜாஜா..

لِّنُخْرِجَ بِهِ حَبًّا وَنَبَاتًا

லி னுக்ரிஜ பிஹி ஹப்பவ் வனபாதா..

وَجَنَّاتٍ أَلْفَافًا

வ ஜன்னாதின் அல் Fபா Fபா..

إِنَّ يَوْمَ الْفَصْلِ كَانَ مِيقَاتًا

இன்ன யவ்மல் பஸ்லி கான மீகாதா..

يَوْمَ يُنفَخُ فِي الصُّورِ فَتَأْتُونَ أَفْوَاجًا

யவ்ம யுன்Fபகு Fபிஸ்ஸுரி Fபதஃதூன அFவாஜா..

وَفُتِحَتِ السَّمَاءُ فَكَانَتْ أَبْوَابًا

வ Fபுத்திஹதிஸ் ஸமாஉ Fபகானத் அப்வாபா

وَسُيِّرَتِ الْجِبَالُ فَكَانَتْ سَرَابًا

வ ஸுய்யிரதில் ஜிபாலு Fபகானத் ஸராபா..

إِنَّ جَهَنَّمَ كَانَتْ مِرْصَادًا

இன்ன ஜஹன்னம கானத் மிர்ஸாதா..

لِّلطَّاغِينَ مَآبًا

லித்தா غகின மஅபா..

لَّابِثِينَ فِيهَا أَحْقَابًا

லாபி ஸீன Fபிஹா அஹ்காபா..

لَّا يَذُوقُونَ فِيهَا بَرْدًا وَلَا شَرَابًا

லா யதூகூன Fபிஹா பர்தவ் வலா ஷராபா.

إِلَّا حَمِيمًا وَغَسَّاقًا

இல்லா ஹமீமவ் வ கஸ்ஸாகா..

جَزَاءً وِفَاقًا

ஜஸாஅவ் விFபாகா..

إِنَّهُمْ كَانُوا لَا يَرْجُونَ حِسَابًا

இன்னஹும் கானு லா யர்ஜுன ஹிஸாபா..

وَكَذَّبُوا بِآيَاتِنَا كِذَّابًا

வ, க ذَّபூ  பி,ஆயாதினா கி ذَّதாபா

وَكُلَّ شَيْءٍ أَحْصَيْنَاهُ كِتَابًا

வ,குல்ல ஷையின் அஹ்ஸைனாஹு கிதாபா..

فَذُوقُوا فَلَن نَّزِيدَكُمْ إِلَّا عَذَابًا

Fபதூகூ Fபலன் நஸீதKகும் இல்லா அதாபா..

إِنَّ لِلْمُتَّقِينَ مَفَازًا

இன்ன லில்,முத்தகீன மFபாஸா..

حَدَائِقَ وَأَعْنَابًا

ஹதாயிக வ,அஃனாபா..

وَكَوَاعِبَ أَتْرَابًا

வ,கவா இப அத்ராபா..

وَكَأْسًا دِهَاقًا

வ, கஃஸன் திஹாகா..

لَّا يَسْمَعُونَ فِيهَا لَغْوًا وَلَا كِذَّابًا

லா யஸ்மவுன Fபிஹா லஃவவ் வலா, கி ِذَّதாபா..

جَزَاءً مِّن رَّبِّكَ عَطَاءً حِسَابًا

ஜஸாஅம் மிர்ரப்பிக அதாஅன் ஹிஸாபா..

رَّبِّ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَا بَيْنَهُمَا الرَّحْمَٰنِ ۖ لَا يَمْلِكُونَ مِنْهُ خِطَابًا

ரப்பிஸ் ஸமாவாதி வல்,அர்ழி வமா,பைனஹுமர் ரஹ்மான் லா யம்லிகூன மின்ஹு கிதாபா..

يَوْمَ يَقُومُ الرُّوحُ وَالْمَلَائِكَةُ صَفًّا ۖ لَّا يَتَكَلَّمُونَ إِلَّا مَنْ أَذِنَ لَهُ الرَّحْمَٰنُ وَقَالَ صَوَابًا

யவ்ம யகூமுர்ரூஹு வல்,மலாயிகது சFப்பன் லா,எத்த கல்லமூன இல்லா மன்,அதினலஹுர் ரஹ்மானு வகால ஸவாபா..

ذَٰلِكَ الْيَوْمُ الْحَقُّ ۖ فَمَن شَاءَ اتَّخَذَ إِلَىٰ رَبِّهِ مَآبًا

தாலிகல் யவ்முல் ஹக் Fபமன் ஷாஅத்தகத இலா ரப்பிஹி மஅபா..

إِنَّا أَنذَرْنَاكُمْ عَذَابًا قَرِيبًا يَوْمَ يَنظُرُ الْمَرْءُ مَا قَدَّمَتْ يَدَاهُ وَيَقُولُ الْكَافِرُ يَا لَيْتَنِي كُنتُ تُرَابًا

இன்னா அன்தர்னாகும் அதாபன் கரீபன் யவ்ம என்லுருல் மர்உ மா கத்தமத் எதாஹு வ,யகூலுல் காFபிரு யா,லைதனி குன்து துராபா..

Tuesday 14 February 2017

எது உண்மை காதல்!!!!!!

https://www.facebook.com/jaltham.jenifer

காதலர் தின ஸ்பெஷல்

இதுதான் காதல்!
---------------
உம்மு சுலைம் என்ற பெண் மீது காதல் கொண்டு அவரை பெண் கேட்டு போனார் அபு தல்ஹா என்பவர்.

இந்த மணமகன் சாதாரணமானவரல்ல. அந்த ஊரிலுள்ள பணக்காரர்களில் ஒருவர். நன்னடத்தை உள்ளவர், அவர் வாழ்ந்த சமுதாயத்தின் நன்மதிப்பையும் பெற்றவர்.

அது போன்று உம்மு சுலைம் என்ற அந்த பெண்மணியும் அழகுடன் நன்னடத்தையும் நல்ல பண்பாடு மிக்க குடும்பத்தையும் சார்ந்தவர்.

அபு தல்ஹா நேரடியாகவே உம்மு சுலைமை சந்தித்து தனது காதலை அவரிடம் தெரிவித்தார். மணமுடிக்க விரும்புவதை கூறினார்.

நல்லவரும் செல்வந்தருமான அவரை மணமுடிக்கும் வாய்ப்பு கிடைக்காமல் சிலர் இருக்கும் போது இவருக்கு நல்லதொரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதுவும் தம்மை தேடி வந்திருக்கிறது. அதை அவர் விட்டு விடுவாரா என்ன?

ஆனால்,

‘நான் இஸ்லாத்தை ஏற்ற ஒரு முஸ்லிம் பெண், நான் எப்படி சிலைகளை வணங்கிக் கொண்டிருக்கும் உங்களை திருமணம் செய்ய முடியும். அது முடியாது’ என்று அவரை திருப்பி அனுப்பி விட்டார்.

தனது காதல் நிறைவேறாமல் போனதால் கனத்த இதயத்துடன் திரும்பி சென்றார் அபு தல்ஹா.

இன்று மனம் மாறியிருக்கும். இல்லையெனில் மாற்ற வேண்டும் என எண்ணி அடுத்தநாள் மீண்டும் அவரிடம் வந்தார்.

‘நான் உங்களை திருமணம் செய்வதற்காக மணக்கொடையாக(மஹராக) நீங்கள் எதைக் கேட்டாலும் நான் தருவேன், அது எனது சொத்துக்களில் பாதியாக இருந்தாலும் சரியே’ என்றார்.

அருiயான இந்த வாய்ப்பை எவரேனும் தவற விடுவாரா?

கோடீஸ்வரியாகும் அந்த வாய்ப்பையும் ஏற்காத உம்மு சுலைம்,
‘நீங்கள் கல்லையும் மரத்தையும் வணங்குகிறீர்கள், தரையில் கிடந்து மிதிபட்ட ஒரு மரத்தை தச்சன் தான் உருவமாக வடிக்கின்றான். அதை நீங்கள் வணங்குகின்றீர்களே!

நன்மையையும் தீமையையும் அது தான் தருகின்றது என நம்பும் உங்களை என்னால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும், இது மடமையல்லவா!,

படைத்த இறைவனை மட்டுமே வணங்கும் நானும் நீங்களும் இணைய முடியாது’ என்று கூறி மறுத்து விட்டார்.

அவரது கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் திரும்பிய அபு தல்ஹா சிந்திக்க துவங்கினார்.

மீண்டும் உம்மு சுலைமை தேடி வந்தார். மீண்டும் இவர் வருவதைக் கண்ட உம்மு சுலைம், வியப்புடன் அவரிடம்

‘என்ன?’ எனக் கேட்டார்.

‘தங்களது கேள்வி என்னை சிந்திக்க வைத்து விட்டது. நாமே உருவாக்கும் ஒரு பொருள் நம்மை எப்படி பாதுகாக்கும், இந்த சிலைகள் எனும் மரக்கட்டைகள் கீழே விழுந்தால் சுக்கு நூறாக உடைந்து போகுமே! தன்னையே பாதுகாக்க முடியாத ஒன்று நம்மை எப்படி பாதுகாக்கும். என்றென்றும் அழியாதவனும், நிலையானவனுமாகிய நம்மை படைத்த அந்த இறைவனால் மட்டுமே நம்மை பாதுகாக்க முடியும் என்பதை நான் உணர்ந்து விட்டேன். நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன்’ என்றார்.

மகிழ்ச்சியால் பரவசமடைந்த உம்மு சுலைம், இதுவரை எவருக்குமே கிடைக்காத பாக்கியம் எனக்கு கிடைத்திருக்கிறது. உங்களது செல்வம் எனக்கு தேவையில்லை. நீங்கள் இஸ்லாத்தை ஏற்றதையே நான் மஹராக கொள்கிறேன்’ என்று கூறி திருமணத்திற்கு சம்மதித்தார்.

அவர்களது திருமணமும் நடந்தேறியது.

இதில் பெண்ணுக்காக தான் அவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார் என யாராவது நம்பினால் அது மிக மடமையாகும். உளப்பூர்வமாக இஸ்லாத்தை ஏற்றதால் தான்,

நீங்கள் விரும்பிய ஒரு பொருளை இறைவழியில் தர்மம் செய்யும்வரை நீங்கள் உண்மையாக நம்பிக்கை கொண்டவராக ஆக முடியாது என்ற இறைவசனம் அருளப்பட்டவுடன் தனக்கு பிடித்த விலை உயர்ந்த தோட்டத்தை தர்மமாக கொடுத்தார்.

இதிலிருந்து நாம் கற்கும் படிப்பினை என்ன?

சிலை வணக்கத்தில் இருப்பனும் இறைவனை மறுப்பவனும் தன்னை மணமுடிக்க விரும்பும் போது அவனது கொள்கை எதுவாக இருந்தால் என்ன, அவன் எப்படி போனால் என்ன என்று ஒரு முஸ்லிம் பெண் இருந்துவிடக் கூடாது. எரியும் நரக நெருப்புக்கு அவனை பலியிடலாமா?

அவனிடம் இஸ்லாத்தை அறிமுகப்படுத்த வேண்டும். சத்தியத்தை உணர வைக்க வேண்டும். அது தான் உண்மையான காதலாக இருக்க முடியும்!

ஆனால், இன்றைய காதல் என்ற பெயரில் நடக்கும் கலியாட்டங்களை இந்த தூய்மையான அன்புடன் எவன் ஒப்பிடுகிறானோ அவன் மிக தரம் தாழ்ந்தவனாவான்!

இறைவனை மறந்தவர்களுக்கும் மறுத்தவர்களுக்கும் மறுமையில் தண்டனை உண்டு, நாம் இவ்வுலகில் செய்த நற்காரியங்களுக்கு அங்கே பலன் கிடைக்கும், நாம் பிறருக்கு செய்த தீமைகளுக்கு அங்கே தண்டனை கிடைக்கும் என்பதை அறிந்த ஒரு முஸ்லிம் பெண், இஸ்லாத்தை விட்டு தான் வெளியேறிவிடாமல் அதில் உறுதியாக இருந்து பிறருக்கும் உண்மையை உணர வைக்க வேண்டும். நரகத்தின் விளிம்பிலிருந்து அவர்களை பாதுகாக்க வேண்டும்!

அது தான் உண்மைக்காதல்.

Saturday 11 February 2017

இந்திய வேளை வாய்ப்பு!!!

தெரிந்து கொள்வோம் :

நம்பில் பலருக்கும்  தெரிந்த உயர் பதவிகள் என்பது   IAS  , IPS  பதவியும் தேர்வுகளும் தான்

ஆனால்  இதே அளவு  தகுதி உள்ள  மத்திய அரசு  பணிகளும்  தேர்வுகளும் எத்தனை உள்ளது என்பதை தெரிந்து கொள்வோம் :

IAS - Indian Administrative Service
IPS - Indian Police Service
IFS - Indian Foreign Service
IFS - Indian Forest Service
IRS - Indian Revenue Service (Income Tax )
IRS - Indian Revenue Service ( Customs & Central Excise )
IAAS - Indian Audit and Accounts Service
ICAS - Indian Civil Accounts Service
ICLS - Indian Corporate Law Service
IDAS - Indian Defence Accounts Service
IDES - Indian Defence Estate Service
I I S  - Indian Information Service
IPTAS - Indian Post & Telecom Accounts Service
IPS  - Indian Postal Service
IRAS - Indian Railway Accounts Service
IRPS - Indian Railway Personal Service
IRTS - Indian Railway Traffics Service
ITS - Indian Trade Service
IRPFS - Indian Railway Protection Force Service

இத்தனை பதவிகளும்  தேர்வுகளும்   இந்திய ஆட்சி  , அதிகார , ஆளுமை பணிகளுக்கான பணி  இடங்கள்
இவை அனைத்துக்கும்  தேவையான கல்வி தகுதி  ஏதாவது ஒரு பட்ட படிப்பு மட்டுமே ,
பெரிய கல்வி தகுதி ஏதும் தேவை இல்லை , ஒரு பட்ட படிப்பும்  முறையான பயிற்ச்சியும் இருந்தால் யார் வேண்டுமானாலும்  இந்த தேர்வுகளில் வெற்றி பெற்று இந்தி ஆட்சி பணி பதவிகளி்ல் அமரலாம்
இத்தனை வாய்ப்புகள்  இருப்பது பெரும்பாலான  இளம் பட்டதாரிகளுக்கு  தெரிவதில்லை

நம் இளைஞர்களுக்கு  தெரிந்தது எல்லாம்  விஏஒ  பதவி ,  ஆபிஸ் கிளார்க்  பதவி , சத்துணவு அமைப்பாளர் பதவி , இந்த பதவிகளுக்கு தான்  8 லட்சம் பேர் தேர்வு எழுதுவாங்க  , இனியாவது  உயர் பதவிகளுக்கு  இந்திய அளவிளான தேர்வுகளுக்கு  தயார் செய்து கொள்ளுங்களேன்
எல்லா உயர் பதவி தேர்வுகளுக்கும் தகுதி  ஒரு  ஒரு  பட்ட படிப்பு தான்
எல்லாவற்றுக்கும்  முறையான பயிற்ச்சி தான் முக்கியம்

முயற்ச்சி செய்யுங்கள்  வெற்றி அடையாளம்

Copy

Friday 10 February 2017

பல் துலக்குவதின் அவசியம்!!!!
அஸ்ஸலாமு அலைக்கும் ரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹு....!!!
.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்“ நினைவில் கொள்க! நீங்கள் ஒவ்வொரு வரும் பொறுப்பாளியே. உங்களில் ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்பிலுள்ளவை பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள். ஆண், தன் குடும்பத்தாருக்குப் பொறுப்பாளன் ஆவான். அவன், தன் பொறுப்புக்குட்பட்டவர்கள் குறித்து விசாரிக்கப்படுவான்.
ஷஹீஹ் புகாரி 7138
.
(முஹம்மதே!) தொழுமாறு உமது குடும்பத்தினரை ஏவுவீராக! அதில் (ஏற்படும் சிரமங்களை) சகித்துக் கொள்வீராக! உம்மிடம் நாம் செல்வத்தைக் கேட்கவில்லை. நாமே உமக்குச் செல்வத்தை அளிக்கிறோம். (இறை) அச்சத்திற்கே (நல்ல) முடிவு உண்டு.
அல் குர்ஆன் 20:132.
.
உறவுகளே.....!!!
.
தொழுகை இல்லாதவனின் எந்த அமல்களும் இறைவனிடம் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. தொழுகை இம்மை வாழ்க்கையில் முழு தூய மனிதனாக்கும் அறிய மருந்து. மறுமையில் சுவர்க்கம் செல்ல துனை இருக்கும் துனை தொழுகை, தீய எண்ணங்களைவிட்டும்,தீய செய்ல்களைவிட்டும் தொழுகை நம்மை நிச்சயமாக தடுக்கும், ஒரு சாலிஹான மதிப்பும் மறியாதையையும் உடைய மணிதராக நம்மை நிச்சயம் வாழ வைக்கும். எனவே எக்காரணம் கொண்டும் தொழுகையை விட்டுவிடாதீர்கள். தொழுகையை முடிந்தவரை அதன் நேரத்தில் தொழுதுவிடுங்கள். ஆண்கள் கண்டிப்பாக மஸ்ஜித் சென்று தொழுகுங்கள்,பெண்கள் வசதி வாய்ப்பு இருப்பின் மஸ்ஜித் செல்லுங்கள். ஆண்களுக்கு மஸ்ஜித் சென்று தொழ தொழுகை நேரம் தவறும் என்னும் பட்சத்தில் வீட்டிலேயே உங்கள் குடும்பத்துடன் ஜமாத்தாக தொழ பழகுங்கள். உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் அன்புடன் அறிவுறை சொல்லி தொழ உற்ச்சாகமூட்டுங்கள். இன்ஷா அல்லாஹ் நாம் அனைவரும் எல்லாம் வல்ல இறைவனை மட்டும் தொழும் சமுதாயமாக அன்னல் பெருமனார் முஹம்ம்து (ஸல்) அவர்களை மட்டும் பின்பற்றும் சமுதாயமாக உருவாக எல்லாம் வல்ல இறைவன் துனை செய்வானாக....ஆமீன்.
.
.
ஜஸாக்குமுல்லாஹ் கைரன் கசீரா...!!!
: லுத்ஃபி. அண்ணா!!!
மோடி ஆண்டாலும் டிரம்ப் ஆண்டாலும்.......

ஜும்ஆவில் இஸ்லாத்தை தழுவிய ஐயப்பன்..!

நாள்:10.02.2017 / TNTJ-துறையூர் கிளை.

Tuesday 7 February 2017

அலை அலையாய் இஸ்லாத்தை நோக்கி!!
திருப்பூரில் இஸ்லாத்தை தழுவிய சகோதரி.சிந்து.!
அல்ஹம்துலில்லாஹ்
நாள்:03.02.2017
தவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்


10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சீமை கருவேல கன்றுகளை அகற்றிய கீழக்கரை கல்லூரி மாணவிகள்.....!!

கீழக்கரையிலிருந்து ராமநாதபுரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலை ஓரங்களில் வளர்ந்துள்ள கருவேல மறுக்கன்றுகளை அகற்றும் பணியில் தாசிம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி மாணவிகள் ஈடுபட்டனர்.

1500 மாணவிகள், பேராசிரியைகள், அலுவலக பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் அனைவரும் கல்லூரி நிர்வாகத்தின் ஒத்துழைப்போடு பொதுப்பணித்துறையோடு இணைந்து சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கருவேல மரங்களை அகற்றினர்.

இப்பணியின் ஏற்பாடுகளை கல்லூரியின் நாட்டுநலப்பணி திட்டத்தினர் செய்திருந்தனர்.

Jazakkallahu Khairan : Keelakkarai Times

#copy

Monday 30 January 2017

#மீள்

பெண்களின் வலியென்றால் அனைவருக்கும் நினைவுக்கு வருவது பிரசவ வலி மட்டும் தான்...

ஆனால் அவர்கள் பெரியவள் ஆனா நாள் முதல் முதிர் பருவம் அடையும் வரை அவள் மாதம் மாதம் படும் இயற்கை வலியை யாரும் அறிவது இல்லை..

குழந்தை பிறகும் அந்த பத்து மாதம் தான் அவள்
இடுப்பு வலி மற்றும் வயற்று வலி வரும் என்று சில ஆண்கள் நினைத்து உள்ளனர்.
பெண்ணாய் பிறந்த ஒருவ்வொரு வரும் எந்த வலியை அனுபவித்து வருகின்றனர்..

அந்த காலத்தில் பெண்கள் இயற்கை உணவில் இருந்து பலத்தை பெற்றனர் அதனால் அந்த காலத்து பெண்கள் இன்றும் இந்த வலியை அனுபவிப்பது இல்லை ஆனால் இந்தக்கால பெண்ணால் வலியை அனுப்பவிக்கின்றன..

என்னென்றால் அவர்கள் உணவு மாற்றம் அதிகஅளவு அவர்கள் வெளிய பாக்கட்டில் உள்ள ஊட்டச்சத்து இல்லாத உணவுவை அதிகம் விரும்புகின்றனர்.. அதனால் பெண்ணால் அதிகம் பாதிப்பு அடைகின்றனர்..

இனி இந்த பழக்கத்தை குறைத்து கொண்டு இரும்பு சத்து அதிகம் உள்ள உணவை அதிகம் உங்கள் உணவில் சேர்த்து கொள்ளுங்கள்..

அதிகமாக பேரிசைப்பழம், தேன், உளுந்தம்பருப்பு , முருங்கைக்கீரை, வாழைப்பழம், காய்கள் அதிகம் உணவில் சேர்த்து கொள்ளுங்கள்..

என் சகோதரிகள் இனி வலியால் கஷ்ட படவேண்டாம். :)

பெண்களை மட்டும் மதிப்போம் என்று கூறுவதை விட அவர்களின் வலியை மதித்து அன்பை செலுத்துவோம்..

இது ஒவ்வொரு ஆணின் கடமை :)

மத்ஹபு ஒரு பார்வை

முகநூல் வாட்ஸப் மத்ஹப் காப்பார்கள் பதில் சொல்வார்களா? 

https://absaaysha.blogspot.com/2017/01/blog-post_30.html?m=1

الهداية شرح البداية -  )1/81-82
ومن شك في صلاته فلم يدر أثلاثا صلى أم أربعا وذلك أول ما عرض له استأنف لقوله عليه الصلاة والسلام إذا شك أحدكم في صلاته أنه كم صلى فليستقبل الصلاة

தொழுகையில் ஒருவர் தாம் எத்தனை ரக்அத்கள் தொழுதோம் என்று சந்தேகம் வந்தால் அவர் தொழுகையை மீண்டும் தொழட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

ஹிதாயா, பாகம் 2, பக்கம் 81-82

இந்த மத்ஹபில் குறிப்பிடும் இந்தச் செய்தியை நபிகளார் எங்கே சொன்னார்கள்? யாரிடத்தில் சொன்னார்கள்? என்பதற்கு மத்ஹபு ஆதரவாளர்கள் தான் பதில் சொல்ல வேண்டும்.

இதில் குறிப்பிடும் இதே பிரச்சனைக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் அழகிய தீர்வு நமக்குச் சொல்லப்பட்டுள்ளது.

உங்களில் ஒருவருக்கு, மூன்று ரக்அத்கள் தொழுதோமா? அல்லது நான்கு ரக்அத்கள் தொழுதோமா? என்று சந்தேகம் ஏற்பட்டால் சந்தேகத்தைக் கைவிட்டு, உறுதியான (மூன்று ரக்அத்கள் என்ப)தன் அடிப்படையில் (மீதி உள்ள ஒரு ரக்அத்தைத்) தொழுது விட்டு, ஸலாம் கொடுப்பதற்கு முன் இரு ஸஜ்தாக்கள் செய்து கொள்ளட்டும்! அவர் (உண்மையில்) ஐந்து ரக்அத்கள் தொழுதிருந்தால் அவ்விரு ஸஜ்தாக்கள் அத்தொழுகையை இரட்டைப்படை ஆக்கி விடும். அவர் நான்கு ரக்அத்கள் தொழுதிருந்தால் அவ்விரு ஸஜ்தாக்களும் (தொழுகைகளில் குழப்பம் ஏற்படுத்திய) ஷைத்தானை முறியடித்ததாக ஆகும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி) 
நூல்: முஸ்லிம் 990

தொழுகையில் சந்தேகம் வந்தால் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று நபிகளார் பொதுவாக வழிகாட்டியிருக்க 

மத்ஹப் நூலாசிரியரோ அந்தச் சந்தேகம் வந்தால் மீண்டும் தொழவேண்டும் என்று  ஆதாரமின்றி பதிந்துவுள்ளார்.

அதையடுத்து சந்தேகம் வந்தால் தொழுகையைத் திரும்பத் தொழ வேண்டும் என்று கூறியதோடு நில்லாமல் இதை நபியின் பெயரால் சொல்லியது அவர் செய்த மிகப்பெரிய பிழையாகும்.

ஜஸாக்கல்லாஹூ ஹைரன் அப்ஸா Blog

தவ்ஹீத் ஜமாஅத்தின் அறிஞர்கள் மக்களிடையே உரையாற்றிடும் போது அறியாமல் ஹதீஸ்களைத் தவறுதலாகக் கூறி விட்டால் கூட அதற்காக வானத்திற்கும் பூமிக்கும் துள்ளிக்குதித்து எக்காளமிடும் மத்ஹபுக்கூட்டம் நபி சொல்லாததை நபி சொன்னதாக தாங்கள் போற்றும் மத்ஹபு அறிஞர்கள் சொல்லியமைக்கு மௌனம் காப்பதேன்? அவமானகரமான மௌனமிது என்பதில் அறிவுடையோர் சந்தேகிக்க மாட்டார்கள்.

Sunday 29 January 2017

ஆயிரம் அவதூறுகளை தாண்டி கொளுந்துவிட்டு எரியும் அல்லாஹ்வின் ஜோதி..!

கோவையில் இஸ்லாத்தை தழுவிய சகோதரி.திரிஷ்யா..!

அல்ஹம்துலில்லாஹ்

நாள்:25.01.2017
TNTJ, கோவை வடக்கு மாவட்டம்
கேள்வி :

 பிறந்தநாள், பெயர்சூட்டுதல்,கத்னா செய்தல் போன்றவற்றிற்காகவீடுவீடாக இனிப்பு கொடுத்துவிடுதல்,கர்ப்பிணிப்பெண்ணுக்கு ஏழாவது மாதம்ஆனதும் பாகுச்சோறு ஆக்கி பகிர்தல்,சிறுவர்,சிறுமியர் குர்ஆனை முழுமையாகஓதிமுடித்துவிட்டால் அதற்காக இனிப்புகொடுத்துவிடுதல், மரணித்தவர்க்காக
40ஆம் நாள் ஃபாதிஹா ஓதி பெட்டிச்சோறுபோடுதல், மரணித்தவர் வீட்டிற்குச்சென்றால் அங்கு வாழைப்பழம் கொடுத்தல்-இவையெல்லாம் எங்கள் ஊரில் நடைமுடைப்படுத்தப்படும் சடங்கு சம்பிரதாயங்கள்.நாம் இவற்றில் கலந்துக்கொள்ளாவிட்டாலும் நம் வீடு தேடி தின்பண்டங்களைக்கொடுத்துவிடுகிறார்கள். இவற்றை நாம் வாங்கலாமா?
மேலும் வரதட்சணை வாங்கிய மணமகன் வீட்டிலிருந்தும், மற்றும்பெண்வீட்டிலிருந்தும் நமக்கு சாப்பாடு கொடுத்துவிடுகிறார்கள். அதையும்வாங்கிக்கொள்ளலாமா?
 மொத்தம் 9 விஷயங்களைக் குறிப்பிட்டுள்ளேன். இவற்றில் எது எதற்கெல்லாம்அனுமதி இருக்கிறது? தயவுசெய்து விரிவாக பதில் தரவும்.

பதில் : நீங்கள் குறிப்பிட்டுள்ள 9 விசயங்களும் மார்க்கத்திற்கு மாற்றமானபித்அத்தான விசயங்கள் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இவற்றைப்புறக்கணிப்பதும், இவற்றை இல்லாமல் ஆக்கப் பாபடுவதும் அனைத்து முஃமின்கள்மீதும் கடமையாகும்.
மேற்கண்ட நிகழ்ச்சிகளில் நாம் கலந்து கொள்ளாவிட்டாலும் நம் வீடு கொடுத்துவிடும் தின்பண்டங்களையும், உணவையும் கொடுத்து விடுகிறார்கள். இவற்றைவாங்கிக் கொள்ளலாமா? எனக் கேட்டுள்ளீர்கள்.
நீங்கள் குறிப்பிட்டுள்ள காரியங்களில் இரண்டு வகையானவை இடம் பெற்றுள்ளன.
ஒன்று : அந்தப் பாவமான காரியங்களை புறக்கணிக்க வேண்டும் என்றஅடிப்படையில் அதில் பரிமாறப்படும் உணவை புறக்கணிப்பது. உணவே ஹராம்என்ற அடிப்படையில் அல்ல.
இரண்டாவது : அதல் பரிமாறப்படும் உணவே ஹராம் என்ற அடிப்படையில்உள்ளவை.
மார்க்கத்திற்கு மாற்றமான காரியங்களான பிறந்தநாள் கொண்டாடுதல் ,பெயர்சூட்டுதல், கத்னா செய்தல், கர்ப்பிணிப்பெண்ணுக்கு ஏழாவது மாதம் ஆனதும்பாகுச்சோறு ஆக்கி பகிர்தல், சிறுவர்,சிறுமியர் குர்ஆனை முழுமையாகஓதிமுடித்துவிட்டால் அதற்காக இனிப்பு கொடுத்துவிடுதல், மார்க்கத்திற்குமாற்றமான திருமணங்கள் போன்றவற்றை முன்னிட்டு தரப்படும் விருந்துநிகழ்ச்சியை புறக்கணிக்க வேண்டும் என்று நாம் கூறுகிறோம். இந்தக் காரியங்களைநாம் ஆதரிக்கக் கூடாது என்பதே இதற்குக் காரணம்.
இந்தக் காரியங்களை முன்னிட்டு தரப்படும் விருந்தில் பங்கெடுத்துவிட்டு நான் இந்தக்காரியங்களை ஆதரிக்கவில்லை என்று கூறினால் இந்தக் கூற்றில் எந்த உண்மையும்இல்லை. அந்த விருந்தில் நாம் கலந்து கொள்வதே அதை நாம் ஆதரிக்கின்றோம்என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றது.
அதே நேரத்தில் இது போன்ற மார்க்கத்திற்கு மாற்றமான காரியங்களுக்கு மற்றும்விருந்திற்கு நம்மை அழைத்து நாம் போகாவிட்டால் இதை நாம் புறக்கணித்துஇருக்கின்றோம் என்பதை இது போன்ற காரியங்களைச் செய்யக்கூடியவர்கள்விளங்கிக் கொள்கின்றார்கள். இந்த அடிப்படையில்தான் இது போன்ற காரியங்கள்நடைபெறும் சபைக்குச் சென்று அந்த விருந்தில் கலந்து கொள்ளக்கூடாது என்றுகூறுகின்றோம்.
இது போன்ற காரியங்களில் வழங்கப்படும் உணவு உண்பதற்கு ஹராம் என்றஅடிப்படையில் இதை நாம் கூறவில்லை. உணவோ, தின்பண்டங்களோவழங்கப்படாமல் இந்தக் காரியங்கள் நடைபெற்றால் அப்போதும் நாம் இந்தக்காரியங்களில் கலந்து கொள்ளக்கூடாது என்றே கூறுகிறோம்.ஏனென்றால் நாம்இவ்வாறு கூறுவதற்கு உணவு காரணமல்ல. மார்க்கத்திற்கு மாற்றமானகாரியங்களுக்கு அங்கீகாரம் வழங்கக்கூடாது என்பதே காரணமாகும். உணவளிப்பதும்அதன் ஒரு பகுதியாக இருப்பதால் விருந்தையும் புறக்கணிப்பதே அந்தக் காரியத்தைமுழுமையாக புறக்கணிப்பதாகும்.
மார்க்கத்திற்கு மாற்றமான காரியங்கள், பித்அத்துகள், ஷிர்க்கான காரியங்கள்போன்றவை இது போன்ற காரியங்களில் இடம் பெறுவதால் அந்தப் பாவத்திற்குதுணைபோய்விடக்கூடாது என்பதற்காகவே  நாம் இந்தத் காரியங்களையும்அதையொட்டி நடைபெறும் விருந்துகளையும் புறக்கணிக்கின்றோம். இது போன்றகாரியங்களில் கலந்து கொள்ளாமல் இருப்பது அந்த உணவு ஹராம் என்பதற்காகஅல்ல.
மார்க்கத்திற்கு மாற்றமான பாவமான காரியங்களில் கலந்து கொள்ளக்கூடாதுஎன்பதற்கு நாம் கூறிய இந்தக் காரணம் நமது வீட்டில் இருந்து கொண்டு அந்தஉணவை உண்ணும் போது ஏற்படாது. அதாவது இந்த உணவை நமது வீட்டில் இருந்துகொண்டு உண்பதால் அந்தக் காரியங்களை ஆதரிக்கும் நிலை ஏற்படவில்லை. இந்தஉணவை உண்பது மார்க்கத்தில் எந்த அடிப்படையிலும் தவறில்லை என்பதால் இதைஉண்ணுகிறோம்.
நமது வீட்டிற்கு உணவுகளைக் கொடுத்துவிட்டால் அதைப் பெற்றுக் கொள்வதில்தவறில்லை. ஏனெனில் நமது வீட்டிற்கு கொடுத்து விடப்படும் உணவு அன்பளிப்புஎன்ற நிலையை அடைந்து விடுகிறது.
பரீராவுக்கு தர்மமாகக் கொடுக்கப்பட்ட இறைச்சி நபி (ஸல்) அவர்களிடம்கொண்டு வரப்பட்டது. அப்போது அவர்கள் '' இது பரீராவுக்குத் தர்மமாகும்.