Wednesday 10 May 2017

பெற்றோர் கவனத்திற்கு!!!!

பெற்றோர்கள் கவனத்திற்கு.. பிளஸ் 2 தேர்வு முடிவு இன்னும் இரண்டே நாளில்...!
இன்னும் இரண்டு நாட்களில் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரவிருக்கிறது. பெற்றோர்கள் உங்கள் குழந்தைகளிடம் சரியான அனுகுமுறையைக் கையாளுங்கள்.

12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளிவர இருக்கும் இந்த நேரத்தில் பெற்றோர்கள் தங்கள் குழந்கைளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும். அவர்களின் வெற்றித் தோல்விகளில் அவர்களுடன் இருந்து அவர்களுக்கு முழு பக்கபலமாக இருக்க வேண்டியக் கடமை பெற்றோர்களுக்குத்தான் அதிகமாக உள்ளது.
12ம் வகுப்பு பொதுத் தேர்வு மே 12ம் தேதி வெளியாகும். 10ம் வகுப்பு பொதுத் தேர்வு மே 19ம் தேதி வெளியாகிறது என ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முடிந்த சில நாட்களிலேயே பல மாணவர்கள் தேர்வு முடிவைக் குறித்த பயத்தில் வீட்டை விட்டு வெளியேறுதல், தவறான முடிவுகளை எடுத்தல் போன்ற காரியங்களில் ஈடுபடுகின்றனர்.


பெற்றோர்கள் கவனத்திற்கு
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் மனநிலையை நன்றாகப் புரிந்தவர்கள். அதனால் பெற்றோர்கள் குழந்தைகளிடம் அவர்கள் எடுக்கும் மதிப்பெண்களைக் குறித்து அதிகமாக விமர்சித்துவிடக் கூடாது. மதிப்பெண் அதிகமாகப் பெற்றால் பாராட்டுங்கள். சற்று குறைந்துவிட்டால் அதற்காக அவர்களைக் காயப்படுத்தாதீர்கள். அவர்களுக்கு ஆறுதலாக இருங்கள்.

 
பக்கபலமாக இருங்கள்
உன்னால் சாதிக்கமுடியும். வெறும் மதிப்பெண்களும் உயர்க்கல்வியும் மட்டும் வாழ்க்கையல்ல என்பதை உங்கள் குழந்தைகளுக்கு உணர்த்துங்கள். அவர்கள் விருப்பத்தைக் கேட்டு அதற்கேற்ற உயர்கல்வி படிப்புகளில் அவர்களை சேர்த்துவிடுங்கள். இன்னும் இரண்டு நாட்கள்தான் தேர்வு முடிவு வர விருப்பதால் தங்கள் எதிர்காலமே இந்த தேர்வு முடிவுதான் எப்படி வருமோ என பயந்து கொண்டிருக்கும் உங்கள் பிள்ளைகளுக்கு தைரியம் கொடுங்கள். அவர்களைத் தனியாக விடாதீர்கள். அவர்கள் மேல் எப்போதும் ஒரு கண் வைத்துக் கொண்டே இருங்கள்...

Wednesday 5 April 2017

ஃபாத்திமா பீர் முஹம்மது பதிவிலிருந்து!!!!

💎ﺑِﺴْﻢِ ﺍﻟﻠَّﻪِ ﺍﻟﺮَّﺣْﻤَﻦِ ﺍﻟﺮَّﺣِﻴﻢ💎

#Biological_Clock_System!

#சுபுஹானல்லாஹ்...!!!

நமது உடல் ஓர் அற்புத படைப்பு.  அதில் ஆச்சரியப்படத்தக்க பல அம்சங்கள் உள்ளன!!

அதில் ஒன்றுதான் நமது உடலில் நேரத்தை தானாகவே ஒழுங்கு படுத்தும் உயிரியல் நேர முறைமை (Biological Clock System)!!!

இதனை வழி நடத்தும் ஒரு சுரப்பி நம் ஒவ்வொருவரின் தலையிலும் உள்ளது.  அதுதான் பினியல் சுரப்பி!!

கடலை உருண்டை வடிவில் இருக்கும் இந்த PINEAL GLAND; பார்வை நரம்புடன் இணைக்கப்பட்டுள்ளது!!

இந்த பினியல் சுரப்பி; ஓர் அரிய  பொருளை தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சுரக்கிறது!!

அதுதான் மெலடோனின் (melatonin)!!

இந்த அதிசய அரிய பொருளின் பலன் மகத்தானது!  புற்று நோயைக் குணப்படுத்தும் இயற்கை மருந்து இந்தப் பொருளில் இருக்கிறது என்று இன்று மருத்துவ விஞ்ஞானிகள் கண்டுப்பிடித்துள்ளார்கள்!!    

மெலடோனின் சுரக்க வேண்டும் என்றால்; ஒரே ஒரு நிபந்தனை. இரவின் இருளாக இருக்க வேண்டும்!!

ஆம்!  இரவின் இருளில்தான் பினியல் சுரப்பி மெலடோனினை சுரக்கும்!!

அதனுடன் இணைக்கப்பட்டுள்ள பார்வை நரம்பு மூலமாக; அது இரவின் இருளை அறிந்து கொள்ளும்!!

ஒவ்வொரு நாளும் இஷாவுக்குப் பிறகு; இருளில் சுரக்கும் மெலடோனின், நமது இரத்த நாளங்களில் பாய்ந்தோடும்.!!

நமது கண்கள் வெளிச்சத்தில் பட்டுக் கொண்டிருந்தால் பினியல் சுரப்பி மெலடோனினை சுரக்காது!!

பினியல் சுரப்பி  மெலடோனினை இஷாவுக்குப் பிறகு சுரக்க ஆர்மபித்து ஃபஜருக்கு இரண்டு மணி நேரத்துக்கு முன் நிறுத்தி விடும்!!

ஆகவே இரவு  நீண்ட நேரம் கண் விழித்திருந்தால்; நாம் புற்று நோயைக் குணப்படுத்தும் மெலடோனின் என்ற இயற்கை மருந்தை இழந்தவர்களாக ஆவோம்.!!!!

எனவே; இரவு முற்கூட்டியே உறங்கி அதிகாலையில் எழுவது புற்று  நோயைத் தடுக்கும் என்று இன்று மருத்துவ உலகம் கூறுகிறது!!

அதே போன்று; அதிகாலையில் காற்று வெளி மண்டலத்தில் ஓஸோன் நிறைந்திருக்கும்.  ஒரு மனிதன் அதிகாலையில் எழுந்து நடமாட ஆரம்பித்தால்:; இந்த ஓஸோன் காற்றை அவன் சுவாசிப்பான்.!!

இது நமது உடலிலுள்ள நோய்களைக் குணப்படுத்தி, நம் ஆயுளை அதிகரிக்கும் என்று மருத்துவ விஞ்ஞானிகள் கூறுகின்றனர்!!

ஆக;  இரவு முற்கூட்டியே உறங்குவதால்; மெலடோனின் கிடைக்கிறது! அதிகாலையில் எழுந்து அலுவல்களைத் துவங்குவதால்; ஓஸோன் கிடைக்கிறது!!

நமது உடலின் ஆரோக்கியம் அனைத்தும் இவற்றில் அடங்கியிருக்கிறது!!!

இதனைத்தான் 1400 ஆண்டுகளுக்கு முன்பே; அண்ணல் நபிகளார் அவர்கள் அழகுற எடுத்துக் கூறினார்கள்!!

அற்புதமாக வாழ்ந்தும் காட்டினார்கள்! அவர்களது வாழ்க்கை முறை; இஷாவுக்குப் பின் உடனே உறங்கி முன் அதிகாலையில் தஹஜ்ஜத்துக்கு எழும் வழக்கம் உடையதாக  இருந்தது!!

அதிகாலையின் சில மணி நேரங்கள் அந்த நாளின் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கக் கூடியவையாக இருக்கின்றன!!

அதிகாலையில் எழும்போது; நமது மூளையும்,  இன்னபிற உறுப்புகளும் பூரண ஓய்வு பெற்று வேலை செய்ய தயாராக இருக்கும்!!

அந்த நேரத்தில் செய்யும் பணிகள் அனைத்தும் திறமை மிக்கதாகவும்,  ஆற்றல் அழுத்தம் மிக்கதாகவும் திகழும்!!

எனவே முன் எழுந்து முன் மறையும் அதிசய மெலடோனினைப் பெறவும்,  அதிகாலைப் பொழுதின் ஓஸோனைப் பெறவும்,  அனைத்துக்கும் மேலாக அல்லாஹ்வின் அருளைப் பெறவும்..!; ஒரு முஸ்லீம் முன் தூங்கி முன் எழ வேண்டும்!!!

(அறிந்ததை அறியாதோர் கற்கும் நோக்கில் பதிந்த பதிவாளருக்கு அல்லாஹ் அருள் புரிவானாக!!)

#படியுங்கள்,
#சிந்தியுங்கள்....
#செயல்படுங்கள்,
#பகிருங்கள்...
💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢

Friday 17 March 2017

இஸ்லாத்தை நோக்கி அலை அலையாய்!!!

இஸ்லாத்தை தழுவினார்!!!
பத்மநாபன் 'உமர் கத்தாப்' ஆக!!
நாள்: 17/03/17
TNTJ கோவை வடக்கு மாவட்டம்
காந்திபுரம் கிளை https://t.co/mIfuNFe6aQ

Friday 24 February 2017

Shifana Farzana முகநூல் பதிவிலிருந்து!!!!

தென்காசி யில்.. மாநாட்டிற்கு பிறகும்..
#ஆர்வத்துடன்_களம்_இறங்கிய_மகளிரணியினர்

கடைக்கோடியில் இருக்கும் ஒருவர் இந்த தவ்ஹீத்க்கு வராத வரை எங்கள் பயணம் ஓயாது. இன்ஷாஅல்லாஹ்.

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்..

TNTJ நெல்லை மேற்கு மாவட்டம்
தென்காசி கிழக்கு கிளை சார்பாக மகளிரணியினர் குழு தாவா இன்று 23-2-2017(வியாழக்கிழமை) மஸ்ஜிதுஸ் ஸலாம் பள்ளிவாசல் தெரு,மற்றும் skp தெரு இரு தெருக்களில் இணைவைப்பு குறித்து விளக்கி, வருகிற பிப்ரவரி 25 சனிக்கிழமை இணைவைப்பிற்கு எதிராக கொடிமரத்தில் நடைபெறும் மார்க்க விளக்க கூட்டத்திற்கும் அழைப்பு விடப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்..

என்றும் மார்க்கம் மற்றும் சமுதாய பணிகளில்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
தென்காசி கிழக்கு கிளை
நெல்லை மேற்கு மாவட்டம்

Sunday 19 February 2017

சீராப்புராணம் கட்டுக்கதை!!!!

●அஸ்ஸலாமு அலைக்கும்.
■ நமது திருமணங்களில்
இவ்வளவு அனாச்சாரங்கள்
 கலக்க காரணம் சீறாபுராணம் எழுதிய உமறு புலவரும் ஒரு காரணம்.
அவர் அலி (ரலி) பாத்திமா திருமணத்தை
ரொம்ப கற்பனை கலந்து எழுதியிருக்கிறார்.
அதை நம்ம மக்களும் மார்க்கம் என செய்ய தொடங்கினர்.
பொய்யிலே பிறந்து பொய்யிலே
வளர்ந்த அந்த புலவர் எழுதிய அந்த திருமணத்தில் அலி ரலி குதிரையில் மாப்பிள்ளையாக வந்தார்கள்.அதன் பாதிப்பு இன்றும் தொடர்ந்ததை பார்த்தோம்.
அந்த பாலைவன பிரதேசத்தில் மாவிலை வாழையிலை தோரணமாம்.
கவிதைக்கு பொய் அழகு என
நிருபித்து இருப்பார்.
ஜிப்ரில் அலை அவர்கள் கருகமணி கொண்டு வந்து கட்ட சொன்னார்கள் என பொய் சொல்லி இருப்பார்.நிறைய வழிகேடுகளுக்கு காரணமாய் இருந்தார்.
பலவித இசைக்கருவிகள் முழங்க
திருமணம் நடந்ததாக எழுதி இருப்பார்.
எல்லாம் மார்க்கத்திற்கு முரணாக.
சகாபாக்கள் எளிமையாக திருமணம் நடத்தியிருக்க அதற்கு மாற்றமாக இந்த புலவரும் புழுகியிருக்க நமது மக்களும் பின்பற்ற தொடங்கினர்.
உலக தலைவர்கள் எல்லோரும் வந்ததாக புழுகி இருப்பார்.
● எளிமையான திருமணத்தில்தான் அல்லாஹ்வின் பரக்கத் (மறைமுக பேரருள்) இருக்கின்றது என நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறியுள்ளார்கள்.
மாஷா அல்லாஹ்.

Saturday 18 February 2017

பர்வீன் பின்த் மீரான் அக்கா பதிவிலிருந்து!!!

படித்ததில் பிடித்தது!!

ஸாலிஹான பெண்ணே
சத்தம் பாேடாமல் இதை காெஞ்சம் படி!!
..............

..
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

 ஸ்லிம்மாய் நீயிருக்க
சின்னதாய் ஹபாயா தச்சாயாே....
பாேட்டுட்டு தச்சாயாே...
தச்சிட்டு பாேட்டாயாே..
தண்டனை இதற்கு
என்ன கிடைக்கும் தெரியுமா? பெண்ணே
காெஞ்சம் பாெறு
மஹ்ஸர் வரை காத்திரு!!

லிப்ஸ்டிக் பாேட்டு
உன் உதட்டுக்கு
சாயம் பூசுகிறாய்!
உன் உள்ளம் அங்கே
கறுப்பாகவே இருக்க காரணம் என்ன
சாெல்லடி பெண்ணே!!

கறுப்பு ஹபாயா
பேஷனில்லை !!
கலர் கலராய்
இன்று ஹபாயாக்கள் !!

கப்றுக்குழிக்குள் நீ
கபன்துணியுடன் மட்டுமே
செல்வாய் மறந்தாயாே
பெண்ணே....

மார்க்கம் தெரிந்த நீ
மார்பழகு காட்டி

மருதாேண்டியிட்டு
ரெப்பிங் ஸ்காப் கட்டி
ஆடவரை
மதி மயங்க செய்வது
மடத்தனமில்லையா?

உன்  உள் மனம் உறுத்தவில்லைய பெண்ணே....??

உன் அழகு
#கணவனுக்கு_மட்டுமே
கண்டவனுக்கில்லை
கண்ணியமாய் நடந்துகாெள்
பெண்ணே!!


Friday 17 February 2017

இஸ்லாத்தில் முதல் ஜூம்மா!!!

இஸ்லாத்தில் முதலாவது ஆரம்பிக்கப்பட்ட ஜும்ஆ.
https://absaaysha.blogspot.com/2016/11/blog-post_13.html?m=1
இஸ்லாத்தில் முதன் முதலாவது ஜம்ஆவை ஆரம்பித்த பெருமை அஸ்அத் பின் ஸுராரா (ரலி) அவர்களுக்கே இந்தப் பெருமை சேரும். மக்காவில் நபி (ஸல்) அவர்களால் நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலுடன் இந்த நபித் தோழர் முதன் முதலில் மதீனாவிற்கு ஒரு மைல் தூரத்தில் உள்ள பனூ பயாழா என்ற ஒரு கூட்டத்தினருக்குச் சொந்தமாக கூழாங் கற்கள் நிறைந்த இடத்தில் அஸ்அத் பின் ஸுராரா (ரலி) அவர்களின் தலைமையில் கிட்டத்தட்ட நாட்பது பேர்களை உள்ளடக்கிய ஒரு சிறு கூட்டத்தினர் இவரின் தலைமையில் தொழுதார்கள் என்ற வரலாற்றை இப்போது நாம் பார்ப்போம்.
நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய நாற்பதாவது வயதில் அல்லாஹ்வின் தூதர் என்று மக்காவில் பிரச்சாரம் செய்தார்கள் பிரச்சாரம் செய்யும் போது கடுமையான சோதனைகளுக்கும் தொல்லைகளுக்கும் துன்பங்களுக்கும் மத்தியில் இந்த சத்தியப் பிரச்சாரத்தை மக்கள் மத்தியில் செய்து வந்தார்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட அந்த மக்கள் தொழுகை நிறைவேற்றும் போது கூட அவர்கள் அனைவர்களும் கூட்டாகத் தொழ முடியாத ஒரு நிர்ப்பந்தமான நிலை இருந்தது.
மக்காவில் நபியாக வாழ்ந்த பதின் மூன்று வருட காலத்தில் அவர்கள் ஜும்ஆவை நடத்த முடியவில்லை. மக்கா வெற்றிக்குப் பிறகுதான் அங்கு ஜும்ஆ நடைபெற்று வந்தது. மக்காவைப் பொறுத்த வரை அறபுக்கள் அனைவர்களும் கஃபாவை புனிதமான ஒரு ஆலயமாகக் கருதி வந்தார்கள். ஹஜ்ஜுடைய காலத்தில் அனைவர்களும் மக்காவிற்கு யாத்திரிகை மேற் கொண்டு மக்காவை நோக்கி வருவார்கள். அப்படி மக்காவிற்கு ஹஜ்ஜுக்கு வரும் மக்களிடம் நபி (ஸல்) அவர்கள் தான் இறைத் தூதர் என்பதையும் இஸ்லாத்தினுடைய சட்டதிட்டங்களையும் ஓர் இறைக் கோட்பாட்டையும் சிலை வணக்கத்தையும் எதிர்த்து உள்ளுர் மக்களுக்கு சொல்வது போன்று வெளியூரில் இருந்து வரும் மக்களுக்கும் பிரச்சாரம் செய்வார்கள். இப்படி பதின் மூன்று வருட காலம் செய்து வந்தார்கள் இப்படி நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய ஐம்பதாவது வயதில் மதீனாவில் இருந்து ஆறு பேர்கள் கொண்ட ஒரு குழு ஹஜ் செய்வதற்காக வேண்டி வருகை தந்தார்கள். அந்த ஆறு பேர்களுக்கும் நபி (ஸல்) அவர்கள் இஸ்லாத்தைப் போதித்தார்கள். இவ்வாறு நபி (ஸல்) அவர்களின் போதனையைக் ஆறு பேர்களும் கேட்ட போது அவர்களுக்கு ஒரு மன மாற்றம் ஏற்பட்டு இவர் கூறுவது சரியாகத் தோன்றுவதாக அவர்களுக்குள் ஒரு சிறு மாற்றம் ஏற்பட்டது.
ஆனால் அந்த நேரம்; இஸ்லாத்தை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை நபி (ஸல்) அவர்களை சந்தித்து விட்டு மதீனாவிற்குச் சென்ற இவர்கள் அடுத்த ஆண்டு வரும் போது இந்த ஆறு பேர்களுடன் சேர்ந்து பனிரெண்டு பேர்கள் மதீனாவில் இருந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதற்காக வேண்டி நபி (ஸல்) அவர்களைப் பார்ப்பதற்கு மக்காவிற்கு வருகிறார்கள்.
அடுத்த ஆண்டு ஹஜ்ஜுடைய காலத்தைக் கணித்து வருகிறார்கள் ஏனெனில் ஹஜ்ஜுடைய காலம் அல்லாத காலத்தில் முஹம்மதை சந்திக்க வந்தவர்கள் என்று மக்கா இணைவைப்பாளர்களுக்கு தெரிந்தால் அவர்களுக்கு சொல்லொன்னாத் துன்பதைக் கொடுப்பார்கள் அதனால் தான் அவர்கள் ஹஜ் காலத்தை தேர்வு செய்தார்கள். இந்த பனிரெண்டு பேர்களும் நபி (ஸல்) அவர்களை தனித் தனியாக சந்தித்தார்கள். அவர்கள் அல்லாஹ்வை இறைவனாகவும் நபி (ஸல்) அவர்களை அல்லாஹ்வின் இறுதித் தூதராகவும் ஏற்றுக் கொண்டதோடு இஸ்லாத்தை வாழ்க்கை நெரியாகவும் ஏற்றுக் கொண்டு உயிருள்ள வரை இஸ்லாத்தை உயிருள்ள வரை பின்பற்றுவதாகவும் இன்னும் பல உடன் படிக்கைகளையும் எடுத்துக் கொண்டு நாங்கள் எங்கள் ஊராகிய மதீனாவிற்குச் சென்று அங்கு இந்த சத்தியப் பிரச்சாரத்தை செய்வதாகவும் நபி (ஸல்) அவர்களுக்கு உறுதி மொழி கொடுத்தார்கள். இவர்கள் ஹஸ்ரஜ் கோத்திரத்தைச் சேர்ந்த அஸ்அத் பின் சுராரா (ரலி) அவர்களின் தலைமையில் முதன் முதலில் இஸ்லாத்தைத் தழுவுகிறார்கள். இவர்கள் தான் இஸ்லாமிய சாம்ராஜியம் மதீனாவில் உருவாகுவதற்கு அடித்தளமிட்டவர்கள். நபி (ஸல்) அவர்கள் அவர்களில் தலைமையில் இஸ்லாமிய அரசு உருவாகுவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர்களில் கஅப் பின் மாலிக், உபாதா பின் அஸ்ஸாமித், உக்பா பின் ஆமிர், பத்ருப் போரில் அபூ ஜஹ்லைக் கொன்ற முஆத் (ரலி) ஆகியோர் அடங்குவார்கள்.
இந்த பன்னிரெண்டு பேர் நபி (ஸல்) அவர்களை சந்தித்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர். அவர்கள் இஸ்லாத்தை எற்றபின் நீங்கள் உங்கள் ஊருக்குச்சென்று ஜும்ஆ தொழுகை நடத்துங்கள் ஏனென்றால் மக்காவில் ஜும்ஆ நடத்த இயலாது. அதனால் நீங்கள் மதீனாவிற்கு சென்று அங்கு ஜும்ஆ தொழுகை நடத்துங்கள் என்று அந்த பன்னிரெண்டு பேரில் அஸ்அத் பின் சுராரா அவர்களுக்கு ஆணை பிறப்பித்தார்கள். அவர் அங்கு சென்று ஜும்ஆவை நடத்தினார்.
இது நபி (ஸல்) அவர்களின் 52 வது வயதில் நடந்தது. நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என நியமனம் செய்து 12 வது வருடத்திற்கு பிறகு முதல் ஜு